பரபரப்பு: செய்தியாளர்களை தாக்கிய புவுன்சர்கள்… TVK 2ம் ஆண்டு விழாவில் அட்டகாசம்.!

பரபரப்பு: செய்தியாளர்களை தாக்கிய புவுன்சர்கள்… TVK 2ம் ஆண்டு விழாவில் அட்டகாசம்.!

கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை நடிகர் விஜய் துவங்கிய நிலையில், கட்சி துவங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து, இன்று சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் அருகில் உள்ள பூஞ்சேரி என்ற பகுதியில் அக்கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெறுகிறது.

இதையடுத்து இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த விழாவுக்கு பாஸ் கொடுக்கப்பட்டு அழைக்கப்பட்டுள்ளனர். விழா நடக்கும் அரங்கம் பகுதியில் 1800 முதல் 2000 பேர் வரை அமரும் வகையில் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. பாஸ் உள்ளவர்கள் மட்டுமே விழா அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், பாஸ் பெற்ற மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அரங்குக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விழா அரங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு பாஸ் வழங்கிய நிலையில், உள்ளே அமர இருக்கை வசதி இல்லாததால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. கூடுதலாக அதிக எண்ணிக்கையில் பாஸ் வழங்கியதால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விழாவில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளுக்கு தொண்டர்களுக்கு 20 விதமான சைவ விருந்து வழங்கப்படுகிறது. இன்று மகா சிவராத்திரி என்பதால் அசைவ விருந்து தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இன்றைய விழாவில் கட்சியின் எதிர்கால திட்டங்கள், இன்றைய நிலைப்பாடு குறித்த முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிட வாய்ப்புள்ளதால், இந்த விழாவில் விஜயின் பேச்சு அதிக கவனம் பெற்றுள்ளது.

அரசியல் தேர்தல் வியூகம் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கொடுத்த அறிக்கையின் படி 20 சதவீதம் ஓட்டுகள் தவெக வுக்கு உறுதியாகி விட்டது என்று கூறிய நிலையில், இன்று அதுபற்றிய முக்கிய விஷயங்களை விஜய் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக பாஜக மும்மொழி கொள்கை கல்வி நிதி மறுப்பு குறித்த முக்கிய விஷயங்களை விஜய் பேச வாய்ப்புள்ளதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாஸ் இருந்தும் கட்சியினர் அரங்குக்குள் செல்ல முடியாமல் நூற்றுக்கணக்கானோர் விரக்தியில் வெளியில் காத்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பவுன்சர்கள் செய்தியாளர்களை ஒருமையில் பேசி கெட்ட வார்த்தையில் திட்டி வயிற்றில் குத்தியதில் தனியார் செய்தி நிறுவன செய்தியாளர் சுருண்டு விழுந்தார் தற்போது அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பு நிலவி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!