கூத்தியார்குண்டு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

கூத்தியார்குண்டு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கலம் காத்த விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

விமான கும்பாபிஷேக விழா மார்ச் 15ம் தேதி காலை மங்கள இசை, விநாயகர் பூஜை, முதலாம் கால பூர்வாங்க பூஜைகள், முதலாம் கால யாகவேள்வி, பூர்ணாகுதி, தீபாதாரனை நடைபெற உள்ளது. தொடர்ந்து மார்ச் 16ம் தேதி துவிதியை திதியும், நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதனத்தில் மீன லக்னத்தில் காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கி, கோபூஜை, இரண்டாம் கால யாக வேள்வி, மஹாபூர்ணாகுதி, யாத்ராதானம், கடம்புறப்பாடு மற்றும் பல்வேறு யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் நடைபெறவுள்ளன. பின்னர் 6.45 க்கு மேல் விமான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!