பணி முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது வாகன விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

பணி முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது வாகன விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

மதுரை அருகே பணி முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது இருசக்கர வாகன விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த காசி விஸ்வநாதன் ரம்யா தம்பதியினர் இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
காசி விஸ்வநாதன் 2003 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து தற்போது விருதுநகர் பகுதியில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் காசி விஸ்வநாதன் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் விருதுநகரில் இருந்து தனது வீட்டிற்கு வரும் போது நாகமலை புதுக்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி தலையில் பழுத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் காசி விசுவநாதனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் காசி விஸ்வநாதன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த விபத்து குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

தலைமை காவலர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்ததால் அவரது மனைவியும் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் கதறி அழும் காட்சிகள் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!