கடல் போல் காட்சி அளிக்கும் நிலையூர் கண்மாய்..! மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள விவசாயிகள் கண்மாய்களை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர்.…
Tag: Nilaiyur kanmai
இரவும்,பகலுமாக தொடர்ந்த பணி… நிலையூர் கண்மாய் மடை சீரமைக்கப்பட்டது…
மதுரை மாவட்டத்தில் உள்ள நிலையூர் கண்மாயிக்கு வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரும், சமீபத்தில் பெய்த தொடர் மழையாலும் கண்மாய்…
நிலையூர் கண்மாய் கால்வாயில் மலைப்பாம்பு!

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நிலையூர் கண்மாய் கால்வாய் அமைந்து உள்ளது. தற்போது கால்வாயில் மழையின் உபரிதண்ணீரும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டு நிலையூர் கண்மாய்க்கு தண்ணீரும் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஹார்விப்பட்டி அருகே உள்ள நிலையூர் கண்மாய் கால்வாயின் கரையின் வழியாக மலைப்பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. அதை கண்டவர்கள் மதுரை வனத்துறைக்கும், பாம்புபிடி வீரரான மதுரை சினேக் சகாவிற்கும் தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து மதுரை வனத்துறை அலுவலர் (ரேஞ்சர்) மணிகண்டன், சினேக்சகா ஆகியோர் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பாக நாகமலைபுதுக் கோட்டை வனப்பகுதியில் விட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.