திருநெல்வேலி மாவட்டம்
ஸ்ரீபுரத்தில் தாலுகா அலுவலகம் மற்றும் அதன் அருகே பத்திரம் பதிவு அலுவலகம் மற்றும் இ சேவை மையம் உள்ளதால் மக்கள் தினந்தோறும் வந்து நிலையில் உள்ளனர்… திருநெல்வேலி தாலுகா அலுவலகம் அருகே பத்திரம் பதிவு அலுவலகம் மற்றும்
இ சேவை மையம் சுற்றி தற்போது பெய்த மழையால் மழைநீர் தேங்கி நிற்கிறது… இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் மழை நீர் தேங்கி கிடைப்பதால் நோய் தொற்று
பரவ வாய்ப்பு உள்ளது.
திருநெல்வேலி தாலுகா அலுவலகத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்…