திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வருகிற 14-ந் தேதி முதல் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு என்னும் ஊா் அங்கு காணப்படும் நீா்வீழ்ச்சிக்குப் புகழ்பெற்றது. திற்பரப்பு அருவி நாகா்கோவிலிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த அருவி கோதையாறு நதியில் அமைந்துள்ளது. கோதையாறு திற்பரப்பில் அருவியாக கீழே பாய்கிறது. இது பேச்சிப்பாறை அணையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நீா் வீழ்ச்சி 300 அடி நீளமும் முற்றிலும் பாறைகளால் அமைந்த ஆற்றுப்படுகையும் கொண்டது. இந்த அருவி 50 அடி உயரம் கொண்டது. வருடத்தில் 7 மாதம் இந்த அருவி அதிக அளவு நீருடன் சீற்றத்துடன் காணப்படும். இந்த நீா் வீழ்ச்சியின் மேற்பரப்பில் 250 மீட்டா் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள திற்பரப்பு நீா் தேக்கத் திட்டமானது, சுற்று வட்டார வயல்களின் பாசனத்திற்கு பயன்படுகிறது. இந்த நீா் வீழ்ச்சிக்கு அருகில் ஒரு நீச்சல் குளமும் பூங்காவும் உள்ளது.  படகு சவாரியும் சுற்றுலா செல்வோரின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் கால்மிதிப் படகு வசதியும் உள்ளது. ஆற்றின் இடதுபக்கக் கரையில் நீா்வீழ்ச்சிக்கும் நீா்த்தேக்கத்திற்கும் நடுவே மகாதேவா் கோவில் (சிவன் கோவில்) உள்ளது. இது பன்னிரெண்டு சிவாலயங்களுள் மூன்றாவது சிவ தலமாகும். இந்தக்  கோவிலில் சிவபெருமான் வீரபத்திரன் என்னும் உக்கிர வடிவில் உள்ளார். இந்தக் கோவிலில் 9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாண்டியா் கால கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இது 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ஆகும்.
குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்ப்பரப்பு அருவியில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இதற்கிடையே கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த மாதம் புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் திற்பரப்பு அருவிக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த சூழ்நிலையில் வருகிற 14ம் தேதி முதல் 14-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் திற்பரப்பு அருவிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் தெரிவித்துள்ளார். இதனையொட்டி திற்பரப்பு அருவியையொட்டி உள்ள பகுதியில் பராமரிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. இந்த பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று சிறுவர்கள் விளையாடும் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும் கிருமிநாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுப்பகுதியினரும், சுற்றுலாவாசிகளும் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

error: Content is protected !!