
பஞ்சாப் மாநிலம் கணூரி பார்டரில் 80 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் SKM (NP) தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் டல்லேவால் அவர்களை தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் கர்நாடக குருபுரு சாந்தக்குமார், தமிழக ஒருங்கிணைப்பாளர் பிஆர்.பாண்டியன் ஆகியோர் இன்று 12.02.2025 காலை சந்தித்து 30 நிமிடங்கள் போராட்டம் குறித்து கலந்துரையாடினர்.
மரணப் படுக்கையில் இருந்தாலும் நம்பிக்கையுடன் பேசினார். தமிழகத்தில் ரயில் மறியல், டிராக்டர் பேரணி, சென்னை உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நம்பிக்கை அளிப்பதாக குறிப்பிட்டார். ஒருங்கினைந்து செயல்படும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைவர்களுக்கும், விவசாயிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மத்திய அரசு, மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் அனுகுமுறை குறித்து விளக்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.