
பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் பழனியில் இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!
பழனி தைப்பூசத்தை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஆயை காயிதே மில்லத் சிறுபான்மை சமூக நல அறக்கட்டளை மற்றும் ஆயக்குடி ஜமாத்தார்கள் சார்பில் இலவச மருத்துவ முதலுதவி முகாம் செய்தது பக்தர்கள் பாராட்டும் விதமாக இருந்தது.
முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
பல நாட்களாக பாதங்களில் வலியோடு நடந்து வரும் பக்தர்களுக்கு ஆயை காயிதே மில்லத் சிறுபான்மை சமூக நல அறக்கட்டளை மற்றும் ஆயக்குடி ஜமாத்தார்கள் சார்பில் மூன்றாம் ஆண்டு இலவச மருத்துவ முதலுதவி முகாம் நடைபெற்றது.
இஸ்லாமியர்கள் அனைவரும் சேர்ந்து செய்த இந்த செயல் பக்தர்கள் பாராட்டத்தக்கதாக இருந்தது.
பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தர்களுக்கு பாதங்களில் மசாஜ் செய்தும் மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கியும் முதலுதவி செய்து வருகின்றனர்.
இந்நிகழ்வின் தலைமையாக காயிதே மில்லத் அறக்கட்டளை தலைவர் டாக்டர். அஜ்மத்அலி மற்றும் ஜே.ஆர்.சி மாவட்ட கன்வினர் ரவிச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மேலும் முன்னிலையாக சமூக ஆர்வலர் பொன். முருகானந்தம் மற்றும்
மன்சூர் உசேன், ஜெகநாதன், அக்பர்அலி, சின்னவர் (எ) அஜ்மத்அலி, நாமக்கல் முகமது அலி,
ராஜாமுகமது, முகமது அப்துல்லா, சபிக் அகமது, பாரிஸ்அகமது, முகமது அஜ்ஜார், முகமது ஆசிக், திலகவதி, லதாமணி, செவிலியர் அழகம்மாள், களஞ்சியம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மருத்துவ முதலுதவி முகாம் நிகழ்ச்சி நடைபெற்றன.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து மத நல்லிணக்கத்தோடு இருந்து வருவது சம்பந்தமாக இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே பல்வேறு விமர்சனங்கள் வலம் வரும் நிலையில் தைப்பூச விழாவை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதங்களில் மசாஜ் மற்றும் முதலுதவி ஏற்பாடுகள் செய்த செயல் தமிழகம் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.