திருமங்கலம் அருகே கிணற்றில் சடலமாக கிடந்த பெண்!

திருமங்கலம் அருகே கிணற்றில் சடலமாக கிடந்த பெண்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மைக்குடி கிராமத்தைச் சேர்ந்த அருணகிரியின் மனைவி தமிழ்ச்செல்வி தம்பதியருக்கு திருமணம் ஆகி நான்கு மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது.

நேற்று (மார்ச் .20) மாலை தமிழ்செல்வி தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் தமிழ்செல்வியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று (மார்ச் .21) காலை தோட்டத்திலுள்ள 50 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என நினைத்து மோட்டாரை இயக்கி தண்ணீரை வெளியேற்றினர்.

தண்ணீர் பாதி வெளியேறிய போது கிணற்றினுள் தமிழ்ச்செல்வி உடல் இருந்ததை கண்டு உறவினர்கள் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் தமிழ்ச்செல்வி உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தமிழ் செல்வி கிணற்றுக்குள் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என திருமங்கலம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!