வெறிச்சோடிய சபரிமலை.. மண்டல பூஜை-தங்​கத்​தில் ஜொலித்த ஐயப்பன்!

சபரிமலையில் மண்டல பூஜை​யின் உச்ச நிகழ்​வாக இன்று (டிசம்பர். 27) ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி​வித்து சிறப்பு வழி​பாடு நடை​பெற்றது.

கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதற்காக ஐயப்​பன் கோயி​லில் கடந்த நவம்பர் 16-ம் தேதி மண்டல வழி​பாட்​டுக்​காக நடை​திறக்​கப்​பட்​டது. 41 நாள் வழி​பாட்​டின் உச்ச நிகழ்​வாக இன்று மண்டல பூஜை நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, சுவாமிக்கு 420 பவுன் எடையி​லான தங்​கக் கவச அங்கி அணிவிக்​கப்​பட்டு சிறப்பு வழி​பாடு​ நடை​பெற்றது.

கடந்த 23-ம்3-ம் தேதி ஆரன்​முலா பார்த்​த​சா​ரதி கோயி​லில் இருந்து தங்க அங்கி ஊர்​வல​மாக கொண்​டு​வரப்​பட்​டது. நேற்று மதி​யம் பம்​பையை வந்​தடைந்த தங்க அங்​கி, பக்தர்களின் தரிசனத்​துக்​காக வைக்​கப்​பட்​டது. பின்​னர் தலைச்​சுமை​யாக நீலிமலை வழியாக கொண்டு செல்​லப்​பட்ட தங்க அங்கிக்​கு, தேவசம் போர்டு சார்​பில் சரங்குத்தி​யில் வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

இதன் பின்​னர் தங்க அங்​கியை தந்​திரி மகேஷ் மோக​னரரு, மேல்​சாந்தி பிர​சாத் நம்பூதிரி ஆகியோர் பெற்​றுக் கொண்​டனர். தொடர்ந்து 18-ம் படி வழியே கொண்டு செல்லப்​பட்​டு, மாலை​யில் ஐயப்​பனுக்கு அணிவிக்​கப்​பட்டு தீபா​ராதனை நடைபெற்றது. இரவு 10.45 மணி வரை ஏராள​மான பக்​தர்​கள் தங்​கத்​தில் ஜொலித்த ஐயப்​பனை தரிசனம் செய்​தனர். பின்பு அங்கி அகற்றப்பட்டு டிச.26 இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

இந்த ​நிலை​யில் இன்று டிச.27 நடை​பெறும் மண்டல பூஜையை முன்​னிட்டு அதி​காலை 3 மணிக்கு நடை திறக்​கப்​பட்​டு, பல்​வேறு பூஜைகளுடன் காலை 10.10 மணிக்கு தொடங்கப்பட்ட மண்டல பூஜை நிகழ்வானது, 10.30 மணி அளவில் சந்தன கலசத்தினை மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி, மேளதாளம் இசை முழங்க கோவில் பிரகாரம் சுற்றி வந்து சுவாமிக்கு சந்தன அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தங்க அங்கி அணிவிக்​கப்​பட்டு, தீபா​ராதனை நடை​பெற்று மகர பூஜை வழிபாடு நிறைவடைந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையுடன், சனிக்கிழமை விடுமுறை என்பதால் அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எண்ணப்பட்டு வந்த நிலையில் 2000 க்கும் குறைவான பக்தர்களே மண்டல பூஜையில் சமயத்தில் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நடைபந்தல், சன்னிதானம் பகுதியிலும் கோவில் பிரகார வரிசையில் பக்தர்களின்றி வெறிச்சோடியாக காணப்பட்டது. மேலும் இன்று இரவு 11 மணிக்கு நடை சாத்​தப்​படும் எனவும், இத்​துடன் டிசம்பர் 28, 29-ம் தேதி​களில் சந்​நி​தானம் சுத்​தம் செய்​யப்​பட்​டு, மகர வழி​பாட்​டுக்​காக டிசம்பர் 30-ம் தேதி மாலை​யில் கோயில் நடை திறக்​கப்​படும் என்று தேவசம் போர்டு அதிகாரி​கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!