விரைவில் இந்தியா முழுவதும் பெட்ரோல் & டீசல் வாகனங்களுக்குத் தடை..

விரைவில் இந்தியா முழுவதும் பெட்ரோல் & டீசல் வாகனங்களுக்குத் தடை..

உலகளவில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஏற்கனவே எரிபொருள் கார் தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்துவிட்டன.

மேலும், சில நிறுவனங்கள் எரிபொருள் வாகன தயாரிப்பை நிறுத்துவதற்கான காலக்கெடுவை அறிவித்திருக்கின்றன.

இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு ஒரு நாள் தடை விதிக்கப்படும். அந்த நேரம் இப்போது வந்துவிட்டதா?

2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்கு டெல்லி அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்ததாக அம்மாநிலம் வெளியிடவிருக்கும் எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2.0-விலும் இது முக்கிய அம்சமாக இடம்பெறவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டால், டெல்லியில் புதிதாக இருசக்கரம் வாங்குபவர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே வாங்க முடியும். எரிபொருள் வாகனங்களை வாங்க முடியாது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக இருப்பதை தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை. காற்று மாசுவைக் குறைக்க பல ஆண்டுகளாகவே தொடர்ந்து டெல்லி அரசு முயற்சி செய்து வருகிறது தான்.

அதன் ஒரு பகுதியாக முதலில் அதிக மாசுவை வெளியிடும் எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க முதலில் முயற்சி எடுக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக ஒட்டுமொத்தமாக எரிபொருள் வாகனப் பயன்பாட்டிலிருந்து எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு மக்களை மாற்ற முயற்சி எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2.0-வில் இது ஒரு பகுதி மட்டுமே. இன்னும் பல்வேறு அறிவிப்புகளை இந்தக் கொள்கையின் கீழ் டெல்லி அரசு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமிருந்தே எரிபொருள் மூன்று சக்கர வாகன பதிவை நிறுத்த டெல்லி அரசு திட்டமிடுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது அமலுக்கு வந்தால், ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு எலெக்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே அம்மாநிலத்தில் விற்பனை செய்யப்படும்.

அதேபோல், 10 ஆண்டிற்கும் மேற்பட்ட CNG மூன்று சக்கர வாகனங்களையும் கட்டாயமாக எலெக்ட்ரிக்காக மாற்ற புதிய விதிமுறை கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது.

புதிய எலெக்ட்ரிக் வாகனக் கொள்கையில் இருக்கும் மற்றொரு முக்கிய அம்சம், ஒரு வீட்டில் வாங்கப்படும் மூன்றாவது கார் கண்டிப்பாக எலெக்ட்ரிக் காராகவே இருக்க வேண்டும். எரிபொருள் காராக இருக்கக்கூடாது என்ற விதிமுறையும் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மக்கள் ஒவ்வொரு கட்டமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாகத் தெரிகிறது.

மக்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை உறுதிசெய்யவும், அதனை ஊக்குவிக்கவும் சார்ஜிங் கட்டமைப்புகளையும் பெரிய அளவில் மேம்படுத்த புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2.0-வில் திட்டம் இயற்றப்படவிருப்பதாகத் தெரிகிறது.

குறிப்பாக புதிதாகக் கட்டப்படும் தனியார் குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் வசதி கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்படலாம்.

புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2.0-வின் மூலம், 2027ம் ஆண்டிற்குள் 97% எலெக்ட்ரிக் வாகன விற்பனை என்ற இலக்கை அடைய டெல்லி அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தற்போது அமலில் இருக்கும் எலெக்ட்ரிக் வாகன கொள்கையானது ஆம் ஆத்மி அரசால் 2020ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இது கடந்த 2024 ஆகஸ்ட் மாதமே முடிவுக்கு வந்த நிலையில், இந்த மார்ச் 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த கொள்கைக்கு மாற்றாக புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2.0 அமல்படுத்தப்படவிருக்கிறது.

இந்த புதிய கொள்கையின் கீழேயே மேற்கூறிய எலெக்ட்ரிக் வாகன திட்டங்கள் செயல்படுத்தப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!