கொத்துக்குண்டுகளிலிடமிருந்து நம் தொப்புள்கொடி உறவுகளை காப்பாற்ற இது போதுமா? -திலீபன் கனவு நூல் அறிமுகம்!

நூல் அறிமுகம்:

திலீபன்_கனவு (அரசியல் புனைவு- குறும் புதினம்)

உண்மையில் படிப்பவரை ஆர்வமூட்டும் அளவுக்கு எழுத்துக்கள் அமைந்துள்ளனர் படிக்க ஆரம்பித்த என்னை புத்தகத்தை கீழ வைக்க விடாமல் அப்படியே இரவு 11 வரை இட்டு சென்றது. அதன் பிறகும் புத்தகம் என்னை தூங்க விடாமல் தவிக்க வைத்தது.

இப்போது புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும் புத்தகத்தில் உள்ள சில வாக்கியங்களையும் எழுதுகிறேன்.

ஒருபுறம் திலீபன், செழியன், தென்றல் அங்கவை, செங்காந்தள் , சிறீதரன் , பூங்குழலி, மணிமாறன் என்று உரையாடல்கள் நீள்கின்றன

மறுபுறம் திலீபன் கனவில் ஒரு கதைக்களம் நீள்கிறது அதில் கழுவன், ஆம்பல், இளந்திரையன் , ரியோ , ஒக்லே, டேல்,மார்லீன், இரண்டாம் டூர்டெயோ, போகன் என்று திலீபன் கனவில் வரும் கதைகளும் உரையாடுகிறது.

வேங்கை, பாரி ,பருந்து, கருஞ்சிறுத்தை மனிதர்கள் என்று இந்த திலீபன் கனவில் எதிலிகளின் கனவையும் , நனவையும் நமக்கு ஆர்வமாக எழுத்துக்கள் மூலம் வழங்கியுள்ளார்.

ஒண்ணா இருக்க வேண்டிய தமிழர் நிலத்தை இரண்டாக பிரித்து உன்னோட தாத்தா மார்களை அங்க அடிமை எதிலிகலாகவும் ஆகவும், எங்க அப்பா மார்களை இங்க எதிலிகளாகவும் ஆக்கிவிட்டார்களே இந்த அரசியல்வாதி பயலுக என சலிப்பாக சொன்னான் திலீபன்.

யூதர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அடுத்த முறை விடுதலை பெற்ற இசுரேல் நாட்டில் உன்னை சந்திப்பேன் என்ற வாசகத்தோடு விடைபெற்றனர். எனவும் அந்த மன உறுதி தான் ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் அவர்களின் தாய் நிலத்தை அடைய அடிப்படையாக இருந்தது .என அந்த பெண்மணி சொன்ன சொற்கள் அவனது மனதை சுற்றிக்கொண்டே இருந்தது.

போரும் சமாதானமும் – அன்வர் பாலசிங்கம் என்ற நூலையும் அறிமுகம் செய்கிறார்கள்.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்

தமிழக மக்களே உலகில் எவர் துயருற்றாலும் துடித்து போகும் இளகிய மனம் கொண்டோரே, யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உயர்ந்த தத்துவத்தின் உரிமையாளர்களே, வேலை, வேலை என அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கமே, ஆளத்தெரியாதவனிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு..அன்றாடம் ஆட்சியர் அலுவலக வாசலில் காத்துக் கிடக்கும் ஏமாளி வாக்காளர்களே, ஒரு கணம் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்…

வெலந்தியான எம் தமிழ் உறவுகளே, இத்தோடு கலைந்து விடுவோமா? மீண்டும் நாளையோ அடுத்த வாரம் நமக்கு எப்போது வேறு வேலை இல்லையோ அப்போது கூடி இதே போல் அமெரிக்காவைக் கண்டிப்போமா? போதுமா, குற்றமற்ற செழியனையும் விளிவினையும் விடுவிக்க இது போதுமா? கொத்துக்குண்டுகளிலிடமிருந்து நம் தொப்புள்கொடி உறவுகள் காப்பாற்ற இது போதுமா? சொல்லுங்க….

மேலும் முத்துக்குமரன் அவர்களின் தியாகம் குறித்தும் விரிவாக விளக்குகிறது புத்தகம்.

தென்றல், ஆம்பல் என்னை ஆட்கொண்டார்கள்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் திலீபன் கனவு புத்தகம்

தமிழ் எதிலிகளின் கனவையும் நனவையும் கருவாய்கொண்டு அமைக்கப்பட்டது தான் இந்த திலீபன் நினைவு கனவு..

குறிப்பு : ஒரு சிறு செய்தியை மட்டும் இங்கு பகிர்கிறேன் இந்த புத்தகம் வீடு வந்ததும் என்னுடைய மகள் இயற்கை 4.5 வயது உடையவல் இது என்னுடைய புத்தகம் என்று எடுத்து அவளுடைய புத்தகப் பையில் வைத்துக் கொண்டாள். நான் படித்து விட்டு தருகிறேன் என்று கேட்டேன் மறுத்தால் பிறகு அடுத்த நாள் நான் படித்து விட்டு தருகிறேன் என்று கேட்டவுடன் படித்துவிட்டு கொடுத்துடனும் அது என்னோட புத்தகம் அப்படின்னு சொன்னாள். அதிலிருந்து இந்த புத்தகம் இது எனக்கு ஆர்வம் அதிகமாயிற்று. உண்மையை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்.

உலகின் கடைசி அடிமை விடுதலை அடையும் வரை விடுதலைக்கான போர் நடந்து கொண்டே தான் இருக்கும். ( இந்திரா காந்தி)

புத்தகம்: திலீபன் கனவு ( அரசியல் புனைவு- குறும் புதினம்)

ஆசிரியர்: இராசகுரு கார் பாலன்

காரா_பதிப்பகம்

Kara Books

நன்றி
பிரபு, விழுப்புரம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!