மதுரையில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை பதுக்கிய நபர் கைது…

மதுரை மாநகர் பி 5 தெற்கு வாசல் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட தெற்கு மாசி வீதி , நவயத்கானா தெருவில் ஒரு வீட்டில் புகையிலை குட்கா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தெற்கு வாசல் சட்டம் ஒழுங்கு நிலைய ஆய்வாளர் அனுராதா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ விரைந்து சென்று சோதனை செய்ததில் விமல் குட்கா , கணேஷ் புகையிலை , கூல் லிப்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 56 மூட்டைகள் மற்றும் 7 அட்டை பெட்டிகள் என மொத்தம் 1874 கிலோ கிராம் கைப்பற்றப்பட்டது .

மேலும் மேற்படி புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த மலையரசு , 39/20 , த.பெ. தவமணி , என்பவரையும் கைது செய்தனர் எங்கிருந்து வந்தது யார் யாருக்கு விற்பனை செய்தார். என குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

டிஜிட்டல் விசிட்டிவ் கார்டை பெற உடனே அழைக்கவும்- 9655157226

Leave a Reply

error: Content is protected !!