நாடாளுமன்றத்தில் பீகார் மாநில பட்ஜெட்டை கேட்பது இதுவே முதல்முறை.. -திமுக எம்பி கனிமொழி.

நாடாளுமன்றத்தில் பீகார் மாநில பட்ஜெட்டை கேட்பது இதுவே முதல்முறை.. -திமுக எம்பி கனிமொழி.

என்னுடைய அனுபவத்தில் முதல்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிவிட்டுள்ளார்.

கனிமொழியின் பதிவு திமுக கட்சியினரிடையே அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் உரையின் போது, பீகார் மாநிலத்தின் பெயர் மட்டும் நிர்மலா சீதாராமனால் 4 முறை சொல்லப்பட்டது. வரும் நவம்பர் மாதம் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமரை விதை நுகர்வு அதிகரித்து வரும் நிலையில், பீகாரில் விவசாயிகள் தாமரை விதை சாகுபடி செய்ய உதவும் வகையில் வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாட்னா விமான நிலையம் விரிவுபடுத்தப்படும் என்றும், 4 புதிய ஃகிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் மற்றும் பிஹ்தாவில் ஒரு பிரவுன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதேபோல் உணவு பதப்படுத்தலை ஊக்குவிக்க பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்படும், பீகாரில் உள்ள ஐஐடி நிறுவனமும் விரிவுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டின் போது தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜேடியூ கட்சியின் உதவியால் பாஜக ஆட்சிமைத்தது. அப்போதும் ஆந்திரா மற்றும் பீகாருக்கு பட்ஜெட்டில் பெரிய பங்களிப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இம்முறையும் பீகாருக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் கொடுத்திருக்கிறது. இதனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் இது பீகார் மாநிலத்திற்கான பட்ஜெட் என்று விமர்சித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக தரப்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருத்து பதிவிட்டுள்ளார். அதில், என் அரசியல் அனுபவத்தில் முதல்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் அமர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறி இருக்கிறார். கனிமொழியின் கருத்து அக்கட்சியினரால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!