மதமென பிரிந்தது போதும்… திருப்பரங்குன்றம் தேரோட்டத்தில் நடத்த நெகிழ்ச்சி சம்பவம்.!

மதமென பிரிந்தது போதும்… திருப்பரங்குன்றம் தேரோட்டத்தில் நடத்த நெகிழ்ச்சி சம்பவம்.!

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து கிரிவலப்பதை வழியாக இழுத்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெருவிழா வாகும் 15 நாட்கள் கொண்டாடப்படும். இந்த விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குனி பெரு விழாவினை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் கலந்துகொண்டு முருகப்பெருமான் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இரவு மீனாட்சி அம்மன் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் வழியனுப்பு விழா நடைபெற்றது.

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 90; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 6271; AI_Scene: (6, 0); aec_lux: 106.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 39;

தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் பெரிய தேரோட்டம் கிரிவலப்பாதையில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு பால்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 5: 45 மணிக்கு தேரில் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவலப் பாதை வழியாக ஆடி அசைந்து சென்றது பக்தர்களை பரவசப்படுத்தியது.

தேரின் முன்பாக சிறிய சட்டத் தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அரோகரா கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அப்போது தேரோட்டத்தை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில் பக்தர்கள் வெயிலில் வாட்டி வதங்கிய நிலையில் பக்தர்களின் தாகத்தை தணிக்கும் விதமாக திருப்பரங்குன்றம் கோவில் அருகே உள்ள ஹஜ்ரத் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசல் உறுப்பினர்கள் வெயில் வாட்டிய நிலையில் பெரிய ரதவீதியில் சாலையின் சூட்டைத் தணிக்க தண்ணீர் ஊற்றப்பட்டு, பக்தர்களுக்கு சர்பத் கொடுத்து பக்தர்களின் தாகத்தை தணித்தனர்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் உறுப்பினர்கள் தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு சர்பத் கொடுத்து தாகத்தை தணித்தது சமூக நல்லிணக்கத்தை போற்றும் விதமாக அமைந்துள்ளது. இந்நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதமென பிரிந்தது போதும்… என்ற பாடலே நினைவுக்கு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!