எல்லாரையும் ஏமாத்துறீங்க… அனல் பறக்க வாக்கு சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர் ‘கெளசிக்’

நீங்க மட்டும் ஏமாறவில்லை… எல்லாரையும் ஏமாத்துறீங்க… அனல் பறக்க பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ‘கெளசிக்’

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள், புதுவையில் உள்ள ஒரு லோக்சபா தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவி வருகிறது. அந்தந்த கட்சிகளின் அரசியல் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் , முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. இதில் அதிமுக கூட்டணி வேட்பாளராக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் , திமுக கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாணிக்கம் தாகூர், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளராக ராதிகா சரத்குமார், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மருத்துவர் கௌஷிக் மற்றும் இதர சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம்,திருமங்கலம், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் ஆகிய ஆறு தொகுதிகளில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து விருதுநகர் நாடாளுநாடாளுமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கௌஷிக் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதியில் திறந்தவெளி வேனில் நின்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதுவரை ஆட்சி செய்தவர்கள் உங்களுக்கு என்ன செய்து விட்டார்கள் மழை நீரை சேமிக்காமல், நிலத்தடி நீரை மக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டமைக்க தவற விட்டு விட்டு அனைத்தையும் நாசமாக்கிவிட்டு 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் பாட்டிலில் தண்ணீர் வாங்கி குடிக்க வைத்து இதுதான் எதார்த்த வாழ்க்கை போல மக்களை ஏமாற்றும் அவல நிலைக்கு வைத்துள்ளார்கள்.

குடிநீரைத் தான் விற்பனைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.., சரியான, சமமான, தரமான கல்வித்தரமாவது இருக்கிறதா?

இந்த கிராமத்தில் அரசுப் பள்ளியில் கல்வி பயின்று மருத்துவராகும் வாய்ப்பு இருக்கிறது என்று யாராவது காட்ட முடியுமா?

500க்கும் 1000கும் ஆசைப்பட்டு நீங்கள் ஓட்டை போடுகிறீர்கள் அதனால் பாதிப்படைவது யார் தெரியுமா உங்கள் பிள்ளைகளும் உங்கள் பேரக் குழந்தைகளும் தான்!

காசை வாங்கிக் கொண்டு வாக்களிப்பதால் நீங்கள் மட்டும் ஏமாறவில்லை உங்கள் பிள்ளைகள் உங்கள் பேரக் குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பமே ஏமாந்து விடுகிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிந்தித்து உங்களின் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் சரியான திட்டங்களை கொண்டு வரும் நாம் தமிழர் கட்சிக்கும், இளம் வயது மருத்துவராகிய எனக்கும் மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பளியுங்கள், மாற்றத்தை கொண்டு வருவோம் என கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!