டீக்கடைகளில் வசூல் வேட்டை…நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினருக்கு போலீஸ் வலைவீச்சு – வைரல் வீடியோ

உணவுத் துறை அதிகாரி என்ற பேரில் உணவக உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு

மதுரையை சேர்ந்த பெருமாள் என்பவர் தமிழ் நேசம் நுகர்வோர் சங்கம் என்ற அமைப்பை நடத்தி வந்துள்ளார். இவர் திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் உணவகங்களில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பதாக வந்தத் தகவலின் அடிப்படையில் தான் வந்துள்ளதாகவும், பெருமாள் தன்னை உணவு அதிகாரி என்று கூறிக்கொண்டு அங்கு உள்ள உணவகங்களின் உரிமையாளர்களிம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதற்கு மாதமாதம் பணம் கொடுக்குமாறு மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு டீ கடை உரிமையாளரிடம் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் விற்பதாக தனக்கு ஆதாரத்துடன் தகவல் வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் தான் ரெய்டுக்கு வந்துள்ளதாகவும் மாதம் 5000 வழங்கினால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவேன் என்று சொல்லி மிரட்டியுள்ளார். மேலும் பணம் தர மறுக்கும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிப்பேன் என்று மிரட்டி ரூபாய் ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார். இதுகுறித்து வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்தநிலையில் திருமங்கலம் உட்கோட்ட ஆஸ்டின்பட்டி காவல் துறையினர் வீடியோ ஆதாரம் கொண்டு விசாரணை செய்ததில் பெருமாள் தலை மறைவாகியுள்ளார் என்பது தெரியவந்தது.இதையடுத்து பெருமாளை பிடிக்க போலீஸ் வலைவீசி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!