FLASH NEWS: விதி மீறிய திமுக வேட்பாளர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பரபரப்பு!

விதி மீறிய திமுக வேட்பாளர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பரபரப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரான வி.சி.சந்திரகுமார் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.

அதாவது இன்று அந்த தொகுதியில் வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தனது குடும்பத்தினருடன் மொசுவண்ண வீதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இடைத்தேர்தலின் வெற்றி எதிர்வரும் பொது தேர்தலிலும் எதிரொலிக்கும் என சந்திரகுமார் குறிப்பிட்டார். இப்படியான நிலையில் அவர் கட்சி துண்டு மற்றும் வேட்டியுடன் வாக்கு செலுத்தினார். ஆனால் தேர்தல் விதிகளின்படி கட்சி அடையாளங்களுடன் வாக்குச்சாவடிக்குள் வரக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சந்திரகுமார் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட ஆனந்த் கட்சி துண்டு மற்றும் வேட்டியுடன் வாக்களிக்க வந்தபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!