திருப்பரங்குன்றம்: தர்ப்பணம் செய்ய அனுமதி மறுப்பு…பக்தர்கள் ஏமாற்றம்

மகாளயபட்ச அமாவாசையான இன்று தர்பணம் கொடுக்க கோவில் நிர்வாகம் தடை விதித்ததால் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சரவணப்பொய்கை திருக்குளம் உள்ளது.

இங்கு அமாவாசை மற்றும் மஹாளயபட்ச அமாவாசை நாட்களில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருவது வழக்கம். தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக திதி,தர்ப்பணம் கொடுக்க கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.

இதனால் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாமல்ஏமாற்றத்துடன் திரும்பினர்.

  • செய்தியாளர் வி.காளமேகம் – மதுரை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!