அதிமுக, திமுக உச்சகட்ட மோதல்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி யில் 2021 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சேர்த்தல், திருத்தல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அந்த சுருக்க திருத்தம் முகாமில் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்று வாக்காளர் சேர்ப்பில் தீவிரம் காட்டினர். அந்த வகையில் அரசியல் கட்சியினரிடையே வாக்காளர் சிறப்பு திருத்த முகாமில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அஇஅதிமுக கட்சியினர்சார்பில் விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. எதற்கு விளம்பர பலகைகள் வைத்துள்ளீர் என்று என்று திமுக முன்னாள் சேர்மன் ஸ்டாலின் குணா தரப்பினர் கிழித்து எறிந்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் திருக்குவளையூரில் திமுக மாணவரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில் கைது செய்யப்பட்டார். இக்கைதிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அதிமுகவினரை விமர்சித்து ஸ்டாலின் குணா என்பவருடைய மகன் நிபந்தன் அவதூறு கருத்துக்களை பதிவு செய்திருந்தார். அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ இ அ தி மு க வினர் சார்பில் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இத் தகவல் தெரிந்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் திமுகவினர் திரண்டு வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.ஒரு கட்சியினரை, ஒரு கட்சியினர் அவதூறு பரப்பும் விதத்தில் கருத்துகளை பரப்பியதால் அங்கு மோதல் வெடித்தது .அதோடு மட்டுமல்லாமல் அஇஅதிமுகவினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் இருந்து மாவட்ட செயலாளர் எஸ் பி எம் சையது கான் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அதிமுகவினர் அவதூறு கருத்துக்களை பதிவு செய்த நிபந்தன் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிமுகவினர் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறை சார்பில் உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உத்திரவாதம் அளித்ததைத் தொடர்ந்து அஇஅதிமுகவினர் அமைதியாகச் சென்றனர். தேனி மாவட்ட காவல்துறையினர் அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கால் கலக்கமடைந்துள்ளனர்.