
நம்மாழ்வார், தஞ்சை மண்ணில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை படிப்பைக் கற்றவர். கற்றதை எளிய விவசாயிகளுக்குப் புரியும் மொழியில் உரைத்தார். புத்தகங்கள் பல எழுதியவர். அவரின் சிந்தனையும் செயல்பாடும் படித்த இளைஞர்களை இயற்கை வேளாண்மை பக்கம் திருப்பியுள்ளது. இன்று தானிய உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதில் நம்மாழ்வரின் முப்பதாண்டு கால உழைப்பு உள்ளது.

அவர் தொடங்கிய ‘வானகம்’ எனும் அமைப்பு, உயிர்ச்சூழல் நடுவமாய் உலக உணவுப் பாதுகாப்புக்கான பண்ணை ஆராய்ச்சி மையமாய் செயல்பட்டுவருகிறது. பட்டுக்கோட்டை அருகேயுள்ள பிச்சினிக்காடு கிராமத்தில் மீத்தேன் வாயுத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தச் சென்றிருந்தபோது, உடல் நலக்குறைவால் இதே நாளில் 2013ம் ஆண்டு நம்மாழ்வார் இயற்கையோடு இணைந்தார்.

வானகத்தில் “ஐயா நம்மாழ்வார்” நினைவிடத்தில் இன்று 8ஆம்ஆண்டு நினைவஞ்சலி நிகழ்த்தப்பட்டது .
பொதுமக்கள் , விவசாயிகள் இளைஞர்கள் என எல்லோரும் தாங்கள் சேகரித்த மரபு விதைகள் மற்றும் மரபு காய்கறிகளை ஐயா நம்மாழ்வார் நினைவிடத்தில் படைத்து நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.