மதுரை: சரவணா ஸ்டோரில் கோட்டாட்சியர் ஆய்வு.. கொரோனா விதிமீறல்..5000 ரூபாய் அபராதம் ..

மதுரையில் கொரோனா விதி முறைகளை கடைபிடிக்காத பிரபல ஜவுளி நிறுவனத்திற்கு வருவாய்த் துறையினர் அபராதம்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மதுரை பழங்காநத்தம் அருகே திருப்பரங்குன்றம் GST சாலையில் உள்ள சரவணா செல்வரத்தினம் நிறுவனத்தில், திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதா, திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் சரவணன், திருப்பரங்குன்றம் வருவாய் ஆய்வாளர் ராமர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கொரோனா விதிமுறைகளை மீறி அந்நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படாமலும் இருந்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் 5,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!