108 திவ்ய தேசங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோவில்களில் 7-வது தலமாகவும், 108 திவ்ய தேசங்களில் 53-வது தலமாகவும், சுக்கிரன் தலமாகவும் அமையப் பெற்றது தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் ஆகும்.
தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் மீன் வடிவ காதணி அணிந்த மகர நெடுங்குழைக்காதர், குழைக்காதர் நாச்சியார், திருப்பேரை நாச்சியாருடன் தென்திருப்பேரையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 18ம் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து கோவில் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடி பட்டத்தை அர்ச்சகர் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் தினசரி காலை 7 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் வீதி புறப்பாடும், மாலையில் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம், யானை வாகனத்தில் முக்கிய மாடவீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
22-ந்தேதி இரவு 9.30 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சியும், 24-ந்தேதி மாலை 5 மணிக்கு இந்திர விமானத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 25-ந்தேதி காலை உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களுடன் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு குதிரை வாகனத்தில் புறையூர் ஆணையப்ப பிள்ளை சத்திரத்தில் எழுந்தருளி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ நிகரில் முகில்வண்ணன் கைங்கர்ய சபா டிரஸ்ட் தலைவர் சுந்தரராஜன், முனைவர் சடகோபன், குழைக்காதர், ராமநம்பி நாராயணன், அரவிந்த் லோசனசாமி, ராஜப்பா வெங்கடாச்சாரி, மாரிதுரைசாமி, ஆணையப்பபிள்ளை சத்திரத்தின் வாரிசுதாரர்கள் மற்றும் புறையூர் கிராம மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து 26-ந்தேதி காலை 8 மணிக்கு மேஷ லக்னத்தில் சுவாமி எழுந்தருளல், அதை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 27-ந்தேதி காலை 8மணிக்கு தாமிரபரணி நதியில் தீர்த்த வாரியும் அதை பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலமும் அதை தொடர்ந்து வெற்றிவேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் மற்றும் செயல் அலுவலர் அஜித், கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்துவருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.