‘Be Careful’ திமுக’விற்கு எச்சரிக்கை!மொத்த சிலைகளையும் சாக்கில் கட்டி கடலில் வீசுவேன்… – சீமான் ஆவேசம்.

தமிழ்க்கூத்தனார் 10ஆம் ஆண்டு நினைவேந்தல்

வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் அப்போது சீமானை தேடுவீர்கள். சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும். -சீமான் பேச்சு

மறைந்த புலவர் தமிழ்கூத்தனார் நினைவேந்தல் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தினை வீரகுல அமரர் இயக்கத்தின் சார்பில் முருகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றிக்குமரன், அருண்ஜெயசீலன், ஹமாயூன், மதுரை பாராளுமன்ற தொகுதி செயலாளர் சிவானந்தம், தெற்கு மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டுப்பாசறை செயலாளர் ரா.பா.முருகன், திருப்பரங்குன்றம் தொகுதி தலைவர் ஆறுமுகம், தொகுதி செயலாளர் மருதமுத்து, கொங்கு இளைஞர் பேரவை தனியரசு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சீமான் கூறுகையில்:

உங்களின் குலதெய்வமான வேலு நாச்சியாருக்கு எந்தவித அடையாளமும் இல்லை. அவளின் பேரன் நான் வந்தால் அவளுக்கு மிகப்பெரிய கோயிலை கட்டி தமிழில் ஓதுவார்களை வைத்து தமிழில் குடமுழுக்கு நடத்துவேன். ஒரே நாள் இரவில் மொத்த சிலைகளையும் சாக்கில் கட்டி நடுக்கடலில் வீசுவேன். அப்போது இங்கிருந்த சிலையை காணவில்லை சமாதியை காணவில்லை என போராட்டம் நடைபெறும்.

நீங்கள் எனக்கு ஓட்டு போடுவீர்கள் அந்த நாள் வரும் இல்லையென்றால் வட இந்தியர்கள் உங்களை போடுவார்கள். வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் அப்போது சீமானை தேடுவீர்கள் இது நடக்கும்.

சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும். முக்குலத்தோர்க்கு மூன்று அமைச்சரை கொடுத்தீர்கள். அப்படி கொடுக்காமல் கள்ளர் எத்தனை பேர், மறவர் எத்தனை பேர், அகமுடையார் எத்தனை பேர் என எண்ணி வலிமைக்கேற்ப அமைச்சரவை கொடுக்க வேண்டும். கோனார் சமுதாயத்திற்கு இரண்டு அமைச்சர் கொடுத்துள்ளீர்கள். உங்கள் வீட்டிலேயே இரண்டு அமைச்சர்களை வைத்துள்ளீர்கள். இது என்ன இட ஒதுக்கீடு, சமூக நீதி. எடுத்துக் கொடுக்காமல் எண்ணி கொடுக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!