கோயில் திருவிழாவில் பிரபாகரன்… மக்கள் மனதை வென்ற தலைவர்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருக்கும் கருத்து, உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது.
இதைத்தொடர்ந்து இதுதொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான தகவலுக்கு பல தலைவர்கள் வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தான் பிரபாகரனின் புதிய புகைப்படம் கிடைக்கப்பெற்று, பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் விவதத்துக்கு இடையே தற்போது அந்த படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் முகப்பு படமாக வைத்தும் வருகின்றனர். இந்நிலையில் தற்போது தேனி மாவட்டம் ஜெயமங்கலம் கோயில் திருவிழாவில் அமைக்கப்பட்ட மின்னொளித் திரையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை இடம்பெறச் செய்ய வைத்து மக்கள் கொண்டாடி வரும் செயல் உலகத் தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

திருவிழா காலங்களில் கோயில் அருகே நடிகர்களுக்கு பதாகை வைத்து பால் ஊற்றி திருவிழாவை கொண்டாடப்பட்டு வந்த சூழலில் தற்போது தமிழ் இன விடுதலைக்காக போராடிய உலகத் தமிழர்ககளின் ஒப்பற்ற தலைவன் பிரபாகரனை கொண்டாடி வருவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று எனவும் மேலும் மக்கள் மனதை வென்ற தலைவர் எனவும் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!