
- மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து – R.புதுப்பட்டினத்தை சோ்ந்த 2 இளைஞர்கள் உயிரிழப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே பொன்னமங்கலம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தொண்டி நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் தடம்புரண்டு சாலை ஓரத்தில் இருந்த வரப்பில் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் ஆர். புதுபட்டினத்தைச் சேர்ந்த தினகரன் மற்றும் லட்சுமணன் என்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் தினகரன் என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு மாத காலமே ஆகிறது என்பது குறிப்பிடப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீமிசல் காவல் நிலையத்தினர் இருவர் உடலையும் மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் தொடர்ந்து அதிக விபத்துகள் ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களிடையே கவலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் சா.பழனியாண்டி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.