
நமது தேசத்தின் 74-வது குடியரசு தினம் ஜனவரி 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் நாடு விடுதலை பெற்றது. இதனைத் தொடர்ந்து நமது தேசத்துக்கான அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்து இந்தியா முழுமையான குடியரசு நாடாக உருவெடுத்த நாள் 1950 ஜனவரி 26 ஜனவரி 26-ந் தேதி நாட்டின் குடியரசு தினம் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜபாத்தில் நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தேசிய கொடி ஏற்றினார். சென்னை மெரினா கடற்கரை சாலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார். இதைத்தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் முன்பு தேசியகொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. கோவில் யானை காந்திமதி பிளிறிய சத்தத்துடன் தனது தும்பிக்கையால் தேசியக்கொடிக்கு சல்யூட் அடித்தது. இதை தொடர்ந்து அங்கிருந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது யானைக்கு பழங்கள் வழங்கப்பட்டது. மதுரை தோப்பூர் ஆஸ்டின்பட்டி சிவானந்தா வித்யாலயா மழழையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 74வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சுவாமி சிவானந்தா சுந்தரானந்த மஹராஜ் மற்றும் சுவாமி இராமானந்த மஹராஜ் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆஸ்டின்பட்டி காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் ஆப்ரகாம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பூஜ்யஸ்ரீ பரமானந்த சுவாமிஜீ முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் மா.கண்ணண் வரவேற்புரை வழங்கினார். பெற்றோர்கள் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர். ஆசிரியர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.