
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழா – ஏழாம் நாள் வீதி உலா!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் 25.11.2025 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவிழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், ஷேச வாகனம், ஆட்டுக் கிடாய் வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். அந்த வகையில் ஏழாம் நாளாக இன்று மாலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற டிச.2 ந் தேதி இரவு 7.05 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக டிச.3 ந் தேதி மாலை 6 மணிக்கு கோயிலில் பாலதீபம் ஏற்றி, 35 ஆண்டுகளுக்கு பின் மலைமேல் உள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.