திருநகர் 3வது பேருந்து நிறுத்தம் அருகே உள்ள திருநகர் காவல் நிலைய சோதனைச்சாவடியில் இருந்து 2வது பேருந்து நிறுத்தம் வரை சாலை பணிக்காக சாலை சுரண்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக புதிய சாலை அமைக்காமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வாகன ஓட்டிகள் பலரும் சுரண்டி விட்ட சாலையினால் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயங்கள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுரண்டிப் போட்ட சாலையை மதுரை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக சீரமைத்து வாகன ஓட்டிகள் பயன்பெறுமாறு புதிய சாலை அமைக்குமாாறு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.