கன்னியாகுமரி-காஷ்மீர் இடையேயான இந்திய தேசிய நெடுஞ்சாலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் டோல்கேட்டை அகற்றக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தென் மாவட்ட வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒன்றுகூடி நடத்தினர்.

இந்த ஆர்பட்டாத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பிய போது மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் உள்ள தி.குண்ணத்தூர் அருகே திருவில்லிபுத்தூரை சேர்ந்தவர்கள் வந்த வேனும் எதிரே வந்த லாரியும் மோதி விபத்துகுள்ளானது.

வேனில் வந்த 15 பேர் திருமங்கலம் அரசு மருத்துவமனையிலும் லாரி ஓட்டுநர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.