
கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 20முதல் ஆரம்பம்; ஆன்லைனில் rte.tnschools.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
கல்வி உரிமைச் சட்டம் என்பது 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வியை வழங்க வழிவகை செய்யும் சட்டமாகும்.
இந்த சட்டத்தின் கீழ், ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்கலாம். சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (எல்கேஜி அல்லது முதல் வகுப்பு) அதாவது பள்ளி எந்த வகுப்பில் ஆரம்பிக்கிறதோ அந்த வகுப்பில் சேரலாம். இதற்காக, ஒவ்வொரு தனியார் பள்ளியும் தங்கள் பள்ளியில் உள்ள மாணவர் சேர்க்கையில் 25% இடங்களை கல்வி உரிமை சட்டத்திற்காக ஒதுக்க வேண்டும். இந்த இடங்களில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.
தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினருக்கு 25% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
இந்த இடஒதுக்கீட்டில் எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு சேர ஏப்ரல் 20 முதல் மே 18-ம் தேதி வரை ஆன்லைனில் www.rte.tnschools.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
எல்கேஜி-க்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2019 முதல் 31.7.2020-க்குள்ளாகவும், ஒன்றாம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2017 முதல் 31.7.2018-குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும்.ஆன்லைன் விண்ணப்பத்தில் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருப்பதற்கான சான்றிதழ், இருப்பிடச்சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர் ஆன்லைனில் எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம்.மேலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அலுவலர், எஸ்எஸ்ஏ வட்டார அலுவலர் வள மைய அலுவலகங்களில் விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.