
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் அவர்களின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலகத் தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் இன்று திருச்சுழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சுழி அரசு மருத்துவமனையில் மாபெரும் குருதிகொடை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செ ய்த நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டனர். பின்னர் மண் அரிப்பை தடுத்தவும் இயற்கை சூழலை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் நோக்கத்திலும் திருச்சுழி கண்மாயில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்வில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் க.பழனிச்சாமி தலைமை வகித்தார். திருச்சுழி வடக்கு தொகுதி செயலாளர் தபோ.முனியசாமி முன்னிலை வகித்தார். விருதுநகர் கிழக்கு மாவட்ட பொருளாளர் கா.செந்தில்குமார் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றியம்,நகரம் ,பகுதி,கிளைப் பொறுப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
திருச்சுழி வடக்கு தொகுதி செயலாளர் தபோ.முனியசாமி முன்னிலை வகித்தா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.