73 வயது முதியவர் மோடிக்கு ஓய்வு… இந்திய பிரதமராக இளைஞர் ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் -விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

மத வன்மத்தை பரப்புவதற்காக மோடியை ஆர்எஸ்எஸ் தத்துவங்களை எடுத்துச் சொல்கிறார் என்பது மன வேதனை அளிக்கிறது. 73 வயது முதியவர் மோடிக்கு ஓய்வு கொடுத்து இளைஞர் ராகுலுக்கு இந்திய பிரதமராக வாய்ப்பு கொடுக்க வேண்டும் -விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளரான மாணிக்கம் தாகூர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

நேற்று மோடி பேசிய பேச்சு கண்டிக்கத்தக்கது. மத வன்மத்தை பரப்புவதற்காக மோடியை ஆர்எஸ்எஸ் தத்துவங்களை எடுத்துச் சொல்கிறார் என்பது மன வேதனை அளிக்கிறது.

73 வயதாகும் பிரதமர் மோடிக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழக மக்களைப் போல இந்தியாவில் உள்ள மக்களும் ஜூன் நான்காம் தேதி அவருக்கு ஓய்வு கொடுப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. வேலைவாய்ப்பு பிரச்சனைகள் குறையவும், விலைவாசி பிரச்சனை குறையவும் ஒரு இளைய பிரதமர் தேவை. இளைய பிரதமரை ஜூன் நான்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் பிரதமர் மோடிக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர் வி.காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!