தென்திருப்பேரை பங்குனி திருவிழா தேரோட்டம்… கோவிந்தா கோஷங்கள் முழங்க கோலாகலமாக நடந்தது.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோவில்களில் 7-வது தலமாகவும், 108 திவ்ய தேசங்களில் 53-வது தலமாகவும், சுக்கிரன் தலமாகவும் அமையப் பெற்றது தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில்.தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் மீன் வடிவ காதணி அணிந்த ஸ்ரீமகர நெடுங்குழைக்காதன், குழைக்காதர் நாச்சியார், திருப்பேரை நாச்சியாருடன் தென்திருப்பேரையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

கொடியேற்றம்: ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருவிழா இந்த ஆண்டு 5.4.2023 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தென்திருப் பேரை வீதிகளில் கொடிபபட்டம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.மூலஸ்தானத்திலிருந்து கைத்தல சேவையாக உற்சவர் ஸ்ரீநிகரில் முகில் வண்ணன் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதை தொடர்ந்து கொடி மரத்தில் அமைந்துள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.பின்னர் கொடிப்பட்டத்திற்கு மாலை மரியாதை செய்து கற்பூர ஆரத்தி எடுத்து கொடி மரத்தில் கொடிப்பட்டத்தை அர்ச்சகர் காலை 7.15 மணிக்கு ஏற்றி வைத்தார்.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை 7 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீரிதேவி, பூதேவி நாச்சி யார்களுடன் வீதி புறப்பாடும் மாலையில் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம், யானை வாகனம் உள்ளிட்டவைகளில் முக்கிய மாட வீதிகள் வழியாக வீதிவுழா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

கருடசேவை: 9-ந்தேதி இரவு 9.30 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சியும், அன்ன வாகன நிகழ்ச்சியும், 10-ந்தேதி யானை வாகனத்திலும்,11-ந்தேதி மாலை 5 மணிக்கு இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

ஆணையப்ப பிள்ளை சத்திரத்தில் எழுந்தருளல்: 8ம் நாள் திருவிழாவான இன்று காலை உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் நேற்று மாலை 4 மணிக்கு கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் வீதி புறப்பாடாகி புறையூர் ஆணையப்ப பிள்ளை சத்திரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தேரோட்டம்: 9ம் திருவிழாவாக நாளை 13-ந்தேதி காலை 8 மணிக்கு மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார், அதை தொடர்ந்து காலை 9மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் வள்ளியூர் குழைக்காதர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நிர்வாகிகளுக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தேர் கீழ் ரத வீதியில் இருந்து புறப்பட்டு நிற்கிறதா வீதி வழியாக மேலரத வீதி வரை பக்தர்கள் படம் பிடித்து கோவிந்தா கோவிந்தா என கோசத்துடன் இழுத்து வந்தனர். இன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் தேரோட்டம் மேலரத வீதியில் இருந்து புறப்பட்டு வடக்கு வீதி வழியாக வந்து இன்று மாலையில் கோவில் நிலையை வந்து அடைந்தது.

தீர்த்தவாரி: 14-ந்தேதி நாளை காலை 8 மணிக்கு தாமிரபரணி நதியில் தீர்த்த வாரியும், அதைதொடர்ந்து பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக் கோலமும், வெற்றிவேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடு களை செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் அஜீத் மற்றும் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்தனர்.

கலந்து கொண்டவர்கள்: இந்நிகழ்ச்சிகள் வள்ளியூர் குழைக்காதர் குடும்பத்தினர், ஆணையப்ப பிள்ளை வாரிசுதாரர்கள், தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், துணைத்தலைவர் அமிர்தவல்லி, செயல் அலுவலர் ரமேஷ் பாபு, திமுக ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார்,சீனிவாச சேவைகள் அறக்கட்டளை கசங்காதத பெருமாள், ரவிக்குமார் கவுன்சிலர்கள் ஆனந்த், கீதா சண்முகசுந்தரம், மாரியம்மாள், சீதாலட்சுமி கொடி, லட்சுமி, சுபா காசிலட்சுமி, குமரேசன்,ரேவதி, நகர திமுக செயலாளர் முத்து வீர பெருமாள், நகர திமுக அவை தலைவர் மகர பூசைம், ஸ்ரீ நிகரில் முகில் வண்ண கைங்கரிய சபா ட்ரஸ்ட் தலைவர் சுந்தரராஜன், அதிமுக நகர செயலாளர் ஆறுமுகநைனார், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பாவெங்கடாச்சாரி, பெருமாள் என்ற குமார் மற்றும் தென் திருப்பேரை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் & பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரன்ட் மாயவன் தலைமையில் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப் இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார், தீயணைப்பு துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தேரோட்ட விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வாளர் சிவலோக நாயகி, தக்கார் அஜித் மற்றும் உபயதாரர்கள், அலுவலக ஊழியர்கள் செய்து

இருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!