திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் திருட்டு…

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் பரஞ்சோதி. இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அறுபடைவீடுகளில் முதற்படை வீடாக போற்றப்பட்டு வரும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உறவினரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.

முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணம் நடைபெற்றதால் கோயிலில் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் பரஞ்ஜோதி பேண்ட் பையில் வைத்திருந்த ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரொக்க பணத்தை திருடியுள்ளார்.

கோவிலில் இருந்து வெளியே வரும்போது தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணம் காணவில்லை என்பதை அறிந்த பரஞ்சோதி உடனடியாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அதே நாளில் பெருமாள் என்பவரிடமிருந்து 11 ஆயிரம் ரொக்க பணமும் திருடப்பட்டுள்ளது. எனவே இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் சு.வடிவேலன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!