
பெரும் சோகம்: மதுரையில் கனமழை.. மின்வயர் அருந்து மின்சாரம் தாக்கியதில் தாய் தந்தை இருவரும் உயிர் இழப்பு !
மதுரையில் இன்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில் TVS நகர் துரைசாமி ரோடு பகுதியில் வசித்து வரும் முருகேசன் அவருடைய, மனைவி பாப்பாத்தி மற்றும் இவர்களுடைய மகன் சிறுவன் முன்னாள் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அவர்களது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் நிலையில் கடையை அடைத்து வீட்டுக்கு TVS
X ட இருசக்கர வாகனத்தில் தந்தையும் , தாயும் வந்து கொண்டிருந்தனர் இதற்கு முன்னால், சைக்கிளில் மகனும் சந்தான ரோடு பகுதியில் சென்ற பொழுது மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் மின்சாரம் வயர் அறுந்து தொங்கியது படி இருந்துள்ளது. முதலில் சிறுவன் மின்சார வயர் தொங்கியதை பார்த்து கடந்து சென்று திரும்பி பார்க்கும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பா முருகேசன் மற்றும் அம்மா பாப்பாத்தி வரும் பொழுது அவர்கள் மீது மின்சார வயர் பட்டு மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே சிறுவன் கண் முன் துடிதுடித்து இறந்தனர் இதைப் பார்த்த அச்சிறுவன் கூச்சலிட்டான். சிறுவனின் சத்தத்தை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவம் அறிந்த C2 சுப்ரமணியபுரம் காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதியில் மின்சாரத்தை தடை செய்தனர் மேலும் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் இரண்டு உயிர்கள் பரிதாபமாக இருந்துள்ளனர் இதனால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது செய்தியாளர் மதுரை மாவட்டம்
மேலும் இதுபோன்ற கோடை காலங்களில் பெய்ய கூடிய கன மழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் கம்பி வயர்களை ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், கம்பி உடைந்து விழுவது தொடர்பான புகார்களை அழைப்பதற்க்கான சிறப்பு புகார் எண்களை அறிவிக்க வேண்டும் எனவும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..
செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.