
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு இன்று பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சியானது வெகு விமர்ச்சியாக பக்தர்கள் முன்னிலையில் மேலத்தாளம் முழங்க நடைபெற்றது.
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கை பாரம் தூக்கும் நிகழ்ச்சி கடந்த 01-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது., அதே போல் பத்து நாட்கள் சாமி ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 12-ஆம் நாளான நேற்று சூரசம்ஹார லீலை நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான இன்று சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. மாலையில் பச்சைக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த பிறகு சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் கோயில் உள்ள ஆறுகால் மண்டபத்தில் சுவாமிக்கு வைரகற்கள் பதிக்கப்பட்ட தங்ககிரீடம் சூட்டப்பட்டு, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவற்கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது. சுவாமியின் பிரதிநிதியாக ஸ்தானிகப் பட்டர் ரமேஷ் செங்கோலுடன், சேவல்கொடியேந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியானது நாளை திங்கள்கிழமை மதியம் 12.45 மணிக்குமேல் 1.15 மணிக்குள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 09-ஆம் தேதி திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.