மதுரையில் அடுக்குமாடி கட்டிட சாரம் விழுந்து விபத்து!

மதுரையில் அடுக்குமாடி கட்டிட சாரம் விழுந்து விபத்து!

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தபோது அங்கு கட்டப்பட்டு இருந்த இரும்பு சாரம் திடீரென பலத்த காற்று காரணமாக சரிந்து விழுந்து விபத்திற்கு உள்ளானது.

தொடர்ந்து உயர் மின் அழுத்த கம்பியின் மீது விழுந்தது. மேலும் நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் அப்பகுதியில் இல்லாத காரணத்தினால் அசம்பாவிதம் சம்பவம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.

தொடர்ந்து சம்பவம் குறித்து எஸ்.எஸ் காலனி போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி. காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!