மதுரையில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதில் அதிகாரிகளுக்கிடையே கடும் போட்டி?கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்!

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் 3-வது பஸ் நிறுத்தம் அருகே மதுரை மாநகர் போலீஸ் வாகன சோதனை சாவடி அமைந்து. இதன் பக்கவாட்டில் தனக்கன்குளம் பிரிவு உச்சிக் கருப்பணசுவாமி கோவிலுக்குசெல்லும் வழியில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்தது. அதை உடனடியாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் தண்ணீர் கசிந்த இடமானது தற்போது பெரும் பள்ளமாக உருவாகி தண்ணீர் தேங்கி உள்ளது.

தேங்கிய தண்ணீரில் குப்பை, கழிவுகள் சிதறி கிடப்பதால் கொசு உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடைகாலம் நெருங்கி வரும் இந்த கால கட்டத்தில் குடி தண்ணீர் சேமிக்கப்பட்டு தேவைக்கு பயன்படுத்த வேண்டும். மேலும் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடம் மாநகராட்சி பகுதிக்குள் வருகிறதா? அல்லது ஊராட்சி பகுதிக்குள் ? என அதிகாரிகள் குழப்பம் அடைந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் உடைந்த குழாயை சீரமைப்பதோடு, குளமாக தேங்கி உள்ள தண்ணீரில் குப்பை, கழிவுகளை அகற்றி சுகாதாரம் பேணி காக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!