தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது

ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடாக போற்றப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்.இக்கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வரும் அண்மையில் 15 நாட்களாக நடந்து வந்த பங்குனி பெருவிழாவில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் சிகர நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் நடைபெற்று பங்குனி பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இன்று சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருக்கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் திருக்கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்
டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.