மதுரையில் தமிழ்நாடு தமிழருக்கே.. முழங்கிய நாவலர் சோமசுந்தர பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய நாவலர் சோம சுந்தர பாரதியார் நினைவு நாளையொட்டி இன்று காலை 10.00 மணிக்கு மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் , நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மதுரையில் தெலுங்கு மன்னருக்கு முக்கியத்துவம்.? தமிழ் அறிஞர் சிலையை மறைப்பது நியாயமா? மறைக்கப்பட்ட அந்த தமிழ் அறிஞர் யார் தெரியுமா?

இந்நிகழ்வில் கதிர்நிலவன் (மதுரை மாநகர் செயலாளர், த.தே.பே.) முருகன் (நாம் தமிழர் கலை பண்பாட்டுப் பாசறை) , ஆறுமுகம், மருது ( நாம் தமிழர் கட்சி ), கரிகாலன், கலைவாணன் , மலையரசன் (தமிழ்த் தேசியப் பேரியக்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!