பழனி முருகன் கோயிலில் 200கோடி ரூபாய் மதிப்பிலான பெருந்திட்ட பணிகளுக்கான ஆய்வு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையால் பழனி நகர் மற்றும் அடிவாரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் மக்கள் கூட்டத்தால் கடுமையான‌ போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனையடுத்து பழனி கோவிலில் 200கோடிரூபாய்‌ மதிப்பிலான பெருந்திட்ட பணிகளுக்கான திட்டம் வரையறுக்கப்பட்டது. இதனடிப்படையில் பழனி கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் விதமாக விவசாய நிலங்கள் மற்றும் தனியார் இடங்கள் என 58ஏக்கர் அளவிலான நிலங்களை 62கோடி ரூபாயில் கையகப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கான திட்டம் வகுக்கப்பட்டது. இந்த பெருந்திட்ட பணிகளுக்கான திட்டத்திற்கு, நேற்று நடைபெற்ற தமிழக நிதிநிலை அறிக்கையில் 200கோடிரூபாய் நிதிஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெருந்திட்ட பணிகளுக்கான முதற்கட்டமாக பழனி திருக்கோவிலை சுற்றியுள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இதன்மூலம் கையகப்படுத்த தேவையான நிலங்களை ஆய்வு செய்து, அளவீடு செய்யப்பட்டு எல்லைகளை வரையறுக்கும் பணியில் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி.காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!