புதிய தோற்றத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கோபுரம் – பக்தர்கள் மகிழ்ச்சி!

அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக போற்றப்பட்டு வரும் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயின் முன்மண்டபத்தில் மேற்பகுதியில் மின் விளக்குகளில் செய்யப்பட்ட பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

இதில் முதல் படைவீடு அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் என வடிவமைக்கப்பட்டுள்ளது.டிஜிட்டல் தோட்டத்தில் உள்ள இப்பெயர் பலகையால் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கோபுரம் மேலும் ஜொலிக்கிறது என திருப்பரங்குன்றம் வட்டார பொதுமக்களும்,ஆன்மீகப் பெருமக்களும்,பக்தர்களும் தனது கருத்தை தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!