அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலமானார்.
மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.