ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘காஞ்சனா 4’ – செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு 

சென்னை: ராகவா லாரன்ஸ் ‘காஞ்சனா 4’ படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019-ல் ‘காஞ்சனா 3’ என அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார். ஹாரர் – காமெடி ஜானரில் உருவான இப்படங்கள் பேமிலி ஆடியன்ஸை கவர்ந்தது.

‘காஞ்சனா’ சீரிஸ்களின் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக ‘காஞ்சனா 4’ படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும், செப்டம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கான மவுசு இன்றும் குறையவில்லை என்பதை அண்மையில் வெளியான ‘அரண்மனை 4’ திரைப்படத்தின் வெற்றி உறுதி செய்துள்ளது. படம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளதால் லாரன்ஸூக்கு இது உத்வேகம் தந்திருக்க கூடும்.

இதனிடையே ராகவா லாரன்ஸ் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ‘பென்ஸ்’ மற்றும் வெங்கட் மோகனின் ‘ஹன்டர்’ ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!