
சோழவந்தான், ஜூன்.29–
சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சியில் கலைஞர் கருணாநிதி வீடு கட்டும் திட்டத்தில் கிராம பொதுமக்களுடைய கணக்கெடுப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபாண்டி தலைமை தாங்கினார். ஒன்றிய பணியாளர் ரோசி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பாண்டி அறிக்கை வாசித்தார். இதே போல் விக்கிரமங்கலம் ஊராட்சியில் தலைவர் கலியுக நாதன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் செல்வி செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். பானா மூப்பன்பட்டி ஊராட்சியில் தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார் ஊராட்சி செயலாளர் பாண்டி அறிக்கை வாசித்தார் இதேபோல் சக்கரப்ப நாயக்கர் ஊராட்சி, ஏரவார் பட்டி ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.