வாக்குறுதி கொடுக்க அருகதியற்ற கட்சி திமுக: பொன்னார்
தமிழகத்தில் வாக்குறுதி கொடுக்க அருகதியற்ற கட்சி திமுக என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்ததினம் கன்னியாகுமரி ஜீரோ பாயின்ட் பகுதியில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தொழில் பிரிவு செயலாளர் சுபாஷ் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்டு வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
விவசாயிகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள் தூண்டி விட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டம் இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் உள்ளது.போராட்டம் நடத்தும் விவசாய அமைப்புகள் மத்திய அரசின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் அய்யாகண்ணு நடத்திய போராட்டத்திற்கு பின்னால் திமுக இருந்தது.அப்போது விவசாயிகளை துறைசார்ந்த அமைச்சர்களிடம் நான் தான் அழைத்து சென்றேன்.

விவசாயிகளுக்கு தங்களின் உரிமைகளை கேட்க உரிமைஉண்டு.அவர்கள் இரட்டிப்பு நன்மை அமையவேண்டும்,இதுதான் பிரதமரின் கனவு.இதற்காக தான் பிரதமர் மோடி உழைத்துகொண்டிருக்கிறார்.ஐந்து முறை தமிழகத்தில் ஆட்சி நடத்திய திமுகவிற்கு தமிழகத்தின் நிலப்பரப்பு எவ்வளவுஎன்று தெரியாமல் குடும்பத்திற்கு 2 ஏக்கர் என்று அறிவித்தது எதன் அடிப்படையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டு அடுத்த வாக்குறுதியை கொடுக்கட்டும். வாக்குறுதி கொடுக்க அருகதையற்ற கட்சி திமுக. தமிழகத்தில் தற்போது தேய்ந்து கொண்டிருக்கிறது.
கன்னியாகுமரி தொகுதிக்கு நடக்கும் இடைதேர்தலில் பாஜக வெற்றி பெறும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆயிரம் கோடிரூபாய்க்கும் அதிகமான திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இந்த தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே திட்டங்களை நிறைவேற்றமுடியும்.ஒரு எம்பி.,யால் எதையும் சாதிக்கமுடியாது.குமரி மாவட்ட வேலைகாரன் வெற்றி பெற்றால்தான் இந்த பணிகளை செய்து முடிக்கப்படும். பாஜக.,அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் கிடையாது.
பொங்கல் பண்டிகைக்காக தமிழகஅரசு ரேஷன் கார்டுகளுக்கு 2ஆயிரத்து 500 ரூபாய் வழங்குகிறது.மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்பு தவறில்லை.கிராமசபை கூட்டம் என்ற பெயரிலாவது திமுக வினர் கிராமத்தையும், விவசாயிகளையும் பார்க்கட்டும்.தமிழகத்தை 5 முறை ஆட்சிநடத்தி என்ன நலதிட்டங்களை கொண்டுவந்துள்ளார்கள்.திமுக விற்கு ஒட்டுகேட்க என்ன தகுதி இருக்கிறது. அவர் கூறினார்.நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.