முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரானா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை திருவிழாவானது, நேற்று மாலை சுவாமிக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டதோடு, வைரக்கல் பதித்த கிரீடத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி கையில் செங்கோல் பிடித்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதனைதொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்தில் உள்ள உற்சவருக்கு பாலதீபம் ஏற்றப்பட்டு, மணி அடிக்கப்பட்டது.
அதேசமயத்தில் மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் மேல் தளத்தில் மகா தீபம் ஏற்றப்படடது.
அது வரையில் மாலை நான்கு மணி முதல் 7 மணி வரையில் கோவிலின் பிரதான வாயில் சாத்தப்பட்டு கோவிலின் வலது புறம் உள்ள திருக்குளம் வழியில் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
தீபத்திற்கு தேவையான மூன்றரை அடி உயர கொப்பறை, 300 கிலோ நெய், 160 மீட்டர் காடா துணியுடன் கொண்ட திரி, 5 கிலோ எடையில் கற்பூரம் வைத்து தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, கொரோனா முன்னெச்சரிக்கை நடைவெடிக்கையாக பக்தர்கள் கிரிவலம் செல்லவும் தடைவிதிக்கப்பட்டதையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சங்கு மற்றும் வானவேடிக்கை பட்டாசுகள் முழங்க திருப்பரங்குன்றம் மலைமேல் தீபம் ஏற்றப்பட்டு உள்ளதை பக்தர்கள் கோவில் முன்பு பெருந்திரளாக நின்று வழிபட்டு கொண்டு வருகின்றனர்.