குமரி மாவட்ட ஏழை மாற்று திறனாளி மாணவனின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த மனித நேயமிக்க ஏடிஎஸ்பி விஸ்வேஸ் சாஸ்திரிக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் கண்டவிளை பகுதியை சேர்ந்த மாணவர் ஆஷிக்.
இவர் நெய்யூர் சிஎஸ்ஐ போலியோ ஹோமில் தங்கி பயின்று வருகிறார்.
மாற்றுத்திறனாளியான இவர்
நடப்பதற்கு வேண்டி காலில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. மேலும் இவர் பூரண குணம் அடைந்து முழுமையாக
நடப்பதற்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள்ர் கூறினர். இதைக் கேட்ட அந்த மாணவனின் உறவினர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதுகுறித்த தகவல் குளச்சல் ஏ எஸ் பி விஸ்வேஸ் சாஸ்திரி அவர்களுக்கு கிடைத்தது.அந்த மாணவனின் ஏழ்மை நிலையை அறிந்த குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஸ் சாஸ்திரி அந்த மாணவனை நேரில் சென்று சந்தித்து அவருக்கு அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை தனது சொந்த செலவில் தருவதாக கூறினார். இதனால் மாணவர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்படி
ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவனின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 50
ஆயிரத்தை மாணவனின் பாட்டியிடம் ஏஎஸ்பி வழங்கினார். அவருடன் இரணியல் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்
மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.