அதிமுக எம்.எல்.ஏ.,க்கு சவால் விடும் அமமுக இளைஞர் பாசறை செயலாளர்…

அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததாக பொய்யாக செய்தித்தாளில் பரப்புரை செய்ததை அடுத்து எம்.எல்.ஏ.,க்கு சவால் விட்ட அமமுக மதுரை மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்.

அமமுகவில் இருந்த பொறுப்பாளர்கள் விலகி அதிமுக கட்சியில் இணைந்ததாக மதுரை மாவட்ட வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா பத்திரிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.

திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் கிளைப்பொறுப்பு வகித்து வந்த அமமுகவினர் பலரும், ஒன்றிய துணைச் செயலாளர் இருப்பன் ஆகியோரும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டதாகவும், திருப்பரங்குன்றம் தொகுதியில் தனக்கு அதரவு அதிகமாக பெருகிவருவதாகவும் நான் தான் இந்த தொகுதியின் அடுத்த எம்.எல்.ஏ எனவும் பரப்புரை செய்து வந்தார் ராஜன்செல்லப்பா.

திருப்பரங்குன்றம் நிர்வாகிகள் அதிமுக வில் ஒருவர் மட்டுமே இணைந்துள்ளார். ஆனால் பல பேர் இணைந்தது போல் பொய்ப் பிரச்சாரம் செய்வது, விளம்பரம் செய்வது போன்ற விசயங்களை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என அமமுகவினர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ க்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் ஆலம்பட்டி இருளப்பன் அதிமுகவில் இணையவில்லை என நிரூபித்தால் ஒரு லட்சம் தருவதாக அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தனர்.

இதையடுத்து இருளப்பன் அதிமுகவில் இணையவில்லை எனவும் அமமுகவில் தான் இருப்பதாகவும் புறநகர் மாவட்டச் செயலாளர் இ.மகேந்திரன் Ex-MLA அவர்களை சந்தித்த ஆதாரங்களை அமமுகவினர் வெளியிட்டனர்.

சவால் விட்ட அமமுக தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்…

திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றியத்தில் இருந்து அமமுக வினர் விலகி அதிமுகவில் சேர்ந்தனர் என்று கூறி செய்தித்தாளில் வெளியிடச் செய்த ராஜன் செல்லப்பா அவர்களே…ஒன்றிய துணைச் செயலாளர் இருளப்பன் தங்களிடம் வந்ததாக கூறியுள்ளீர்கள். ஆனால் அவர் நான் மாறவே இல்லை என்று கூறி எங்கள் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் இ.மகேந்திரன்EX-MLA அவர்களிடம் நேரில் சென்று கூறினார்.ஆனால் நீங்கள் இருளப்பன் தங்களிடம் வந்ததாக பொய்யாக கூறி வருகிறார் எனவும் அதேபோல் சில கிளைச்செயலாளர்கள் தங்களிடம் வந்ததாக கூறியதாகவும் அமமுகவில் இன்னும் கிளைச்செயலாளர் பொறுப்பே அறிவிக்கப்படவில்லை ..இப்படி இருக்கும்போது கிளைச் செயலாளர்கள் மாறினார்கள் என்று எதன் அடிப்படையில் கூறினீர்கள் ??? . வடபழஞ்சி அமமுக ஊராட்சி செயலாளர் பெயருக்கு பதிலாக வேறு ஒருவர் பெயரை போட்டு ஊராட்சி செயலாளர் மாறிவிட்டார் என்றும் செய்தித்தாளில் கூறியுள்ளீர்களே???.. எதற்கு இப்படி கீழ்த்தரமான ,கேவலமான அரசியல் செய்கிறீர்கள் என குறிப்பிட்டிறிந்த அமமுக மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரவிய கண்ணன் அவர்கள் ராஜன் செல்லப்பாவிற்கு திராணி இருந்தால் திருப்பரங்குன்றம் தொகுதியில் நின்று வென்று காட்டுங்கள் என சவால் விடுத்தார்.

Leave a Reply

error: Content is protected !!